Wednesday, August 7, 2013

அன்பும் பாசமுமாய்!!

காட்சி 1 - அந்த நடுத்தர வயது மனிதர் தொலைவில் யாரையோ பார்த்து 
கையசைதுக்கொண்டிருந்தார்.திரும்பிப் பார்த்தேன்.அவரது மனைவி கையில் கனமான ஒரு பையோடு வந்து கொண்டிருந்தார்.அவர் அருகில் வந்ததும் அவசரமாக பக்கத்தில் வந்து  அந்தப்பையை அவர் வேண்டாம் என்று சொல்லிகொண்டிருக்கும்போதே ஒரு கையில் இல்லை உனக்கு வலிக்கும் என்று வாங்கிக் கொண்டு,மறு கையால் அவர் மனைவின் கைகளைப்பிடிதுக் கொண்டு நடக்கிறார் - அன்பு

காட்சி  2 - தனது மகனோடு இரு சக்கர வாகனத்தில் வந்து இருந்குகிறார் ஒரு வயதான பெண்மணி.இறங்கியவுடன் மகனைப் பார்த்து பார்த்து பத்திரமாப் போப்பா..என்று சொல்ல அந்தப் பையனும் சரிம்மா என்று தலையாட்டிக்கொண்டே செல்ல,அவனது தலை மறையும் வரை பார்த்துக்கொண்டே நகர்கிறார் - பாசம்.

நண்பனுக்காய் காத்துக்கொண்டு இருக்கையில் நடந்த நிகழ்வுகள்...  

No comments: